நேற்று youtubeயில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். நடிகர் சிவகார்த்திகேயனும், பல கல்லூரி கன்னிகளும் கலந்து கொண்ட நிகழ்ச்சி அது... அதில் ஒரு பெண் சிவகார்த்திகேயனுக்கு வீட்டிலிருத்து பொங்கல் கொண்டு வந்து ஊட்டி விட்டே ஆக வேண்டும் என்று ஊட்டி விடுகிறார். இன்னொரு பெண் நீங்கள் என்னை தொட்டு தூக்க வேண்டும் என அடம் பிடிக்கிறார். நடிகர் அவர் நாகரீகமா என்னை வீட்டுக்கு போக விடாமல் ஆக்கிடுவீங்க போல என்று தன் தர்ம சங்கடத்தை மறைமுகமாக கூறுகிறார்... இயக்குனர் அழ சொன்னால் அழும், சிரிக்க சொன்னால் சிரிக்கும், பல பெண்களோடு பல பேர் மத்தியில் கட்டிப் புரளும் ஒரு நடிகன் மீது இந்த பெண்களுக்கு ஏன் இத்தனை பெரிய ஈர்ப்பு?(போடா! உனக்கு வயித்தெரிச்சல் மட்டும் சொல்லாதீங்க, அதெல்லாம் ஒரு hair'ம் இல்ல) தன்னை சுற்றி பல உறவுகள் அன்பாக இருக்கும் தருவாயிலும் பணத்துக்காக நடிக்கும் ஒரு நடிகன் மீது ஏன் தன்னை தொட்டு தூக்க வைக்கும் அளவிற்கு அன்பு? விளங்கவே இல்லை நவீன தமிழச்சிகளே... பணம் செலவழித்து படம் பார்த்தால் அந்த இரண்டரை மனி நேரம் பொழுது போக்கு என்று உணருங்கள் ஸ்டைலீஷ் தமிழச்சிகளே. அதை கடந்து அந்த நடிகனை மன்மதனாக பார்க்காதீர்கள் உங்கள் மனாளனை மன்மதனாக பாருங்கள். சிந்தியுங்கள் பெண்களே!!! இப்படி கேவலமாக நடந்து கொள்ளும் பெண்களும், அதைக் கண்டிக்காத, கண்டுகொள்ளாத பெண்கள் அமைப்புகளுக்கும், ஏதாவது தவறுநடநதால் மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு, பெண்ணினத்தைக் காக்க வந்த ரட்சகர்கள் போல் பேசுவது பச்சை ஏமாற்றுவேலை. பெண்கள் தவறாக நடத்து கொள்ளும்போது அதைக் கண்டிக்காத, அவர்களை சரியாக வழி நடத்த எந்த முயற்சியும் எடுக்காத பெண்களுக்கும், பெண்கள் அமைப்புகளுக்கும், தவறுகள் நடக்கும் போது குரலெழுப்ப எந்த தார்மீக உரிமையும் இல்லை. அப்போது மட்டும் கொதித்து எழுபவர்கள், பாதிக்கப் பட்ட பெண்ணை வைத்து பிரபலமாகத் துடிப்பவர்களே. பெண்கள் இப்படி அதுவும், ஒரு தொலைக்காட்சி நிகழ்சியில் நடநது கொள்ளும்போது பார்தது, பெருமையடையும், பூரித்துப் போகும் அவர்களின் கேடுகெட்ட பெற்றோர்களை எந்த வகையில் சேர்ப்பது ?
No comments:
Post a Comment